யானை தாக்கியதில் வயோதிபர் மரணம்-மூதூரில் சோகம்

 


திருகோணமலை-மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டித்திடல் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது.


இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர் -பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த முருகுப்பிள்ளை ராசலிங்கம் (69வயது) எனவும் தெரியவருகிறது.

சம்பவம் குறித்து தெரிய வருவதாவது-வீட்டை அண்மித்த பகுதியில் தோட்ட பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த போது யானை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதுடன் விசாரணைகளை மூதூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

Previous Post Next Post

نموذج الاتصال